விதியை வெல்லுதல் - ஜெயபாரதி
To: agathiyar@yahoogroups.com
From: jaybee
Date: Thu, 21 Mar 2002 12:14:28 +0800
Subject: Answer#1-Re: [agathiyar] vidhiyai velluthal
அன்பர்களே,
At 07:41 PM 3/15/02 -0500, Suresh Kumar wrote:
>வணக்கம்
>
>விதியை மதியால் வெல்ல முடியும் என்பர்.
>
>மதியால் ‘இப்படிச் செய்தால்’ வெற்றி கிடைக்கும்
>என்பது விதியாகிருந்தால் தானா ??
>
>விதியை வெல்ல மதி வேலை செய்யவேண்டும் என்பது கூட விதிதானா ?
>
>புரியவில்லை.
>
இதே விஷயத்தைப் பற்றி ஐந்தாண்டுகளுக்கு முன்னர்
தமிழ்டாட்நெட்டில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது
நான் ‘நாடி ஜோதிடம்’ என்னும் தலைப்பில் மடல்தொடர் ஒன்றை
இட்டுக்கொண்டிருந்தேன். அதன் தொடர்பாக இணையத்தோர்
கேட்ட கேள்விகளையெல்லாம் தொகுத்து பதிலளித்தேன்.
அதில் ஒரு சிறிய பகுதியை இங்கு இட்டுள்ளேன்.
சிறிய பகுதிதான். ஆனால் சற்று நீளமானது. ஜீரணிப்பதும் சிரமம்.
ஆகவே பிரித்து இட்டுள்ளேன். அடுத்த பாகமும் தொடரும்.
மேலே படியுங்கள்:
கேள்வி:
7. எல்லா உயிாினங்களின் வருங்காலமும் பிறக்கும் முன்பே
நிர்ணயிக்கப் பட்டிருந்தால், வாழ்க்கையின் பொருள் என்ன?
பதில்:
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
கதி…..
விதி…..
இப்போது சொல்லுங்கள்.
கதியென்றால் என்ன?
விதியென்றால் என்ன?
இரண்டும் ஒன்றேதானா….?
அல்லது
வெவ்வேறா…….?
கேள்வி:
8. தனி உாிமை (free choice) இல்லாத உயிர்கள் எவ்வாறு
பிறப்பு/இறப்பு என்ற சுற்று வட்டத்தில் இருந்து தப்பிக்க முடியும்?
9. ஒரு மூலக்கூற்றின் (molecule) மின்னணுவின் (electron)
இருப்பிடத்தைக் கூடத் திட்ட வட்டமாக நிர்ணயிக்க முடியாது
என்று Heisenberg Uncertainty principle கூறும் போது, மானிடர்
யாவாின் பிற்காலத்தைத் திட்ட வட்டமாகச் சொல்ல முடியும்
என்பதற்கு என்ன நிரூபணம் காட்ட முடியும்?
பதில்:
இந்தக் கேள்விகளுக்கு நேரடியாகவும் தனியாகவும் என்னால்
கூறயியலவில்லை.
என்ன செய்வது? என்னுடைய அறிவின் எல்லையால் ஏற்பட்ட
வரையறை. முடிந்தவரையில் முயற்சித்துள்ளேன்.
நம்முடைய சாஸ்திரங்கள் கூறியிருப்பதன் சுருக்கம் இதுதான்:
உயிர்களின் பிறவிக்கு மூல காரணம் - பிராரத்தம், சஞ்சிதம்,
ஆகாமியம் என்னும் மூவகையான வினைகள்தாம். இவற்றின்
விளைவாகவே பிறவியும் அப்பிறவியில் உள்ள விதியும்
நிர்ணயிக்கப்படுகின்றன.
இவையெல்லாம் ஒரு Grand Design, ஒரு Master Plan இன்
உட்கூறுகளாக, ஒன்றுடன் ஒன்று தொடர்பு
கொண்டவையாக, பின்னிப் பிணைந்து விளங்கும்.
ஒரு Master Plan, Grand Design என்று இருந்தால் ஒரு Executor,
Orchestrator இருந்தாகவேண்டுமே?
ஒளவையார் கூறுகிறார்,
“மேலைத் தவத்தளவேயாகுமாம்
தான் பெற்ற செல்வம்.”
முற்பிறவியில் செய்த தவமே இப்பிறவியில் அடையும் செல்வத்தை
நிர்ணயிக்கிறது..
இன்னும் கூறுகிறார்,
“எழுதியவாறே காண் இரங்கு மட நெஞ்சே!
கருதியவாறாகுமோ கருமம்? - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை! ”
நினைத்ததெல்லாம் கொடுக்ககூடியது, தேவலோகத்துக் ‘கற்பகத்தரு’
என்னும் மரம். அத்தகைய மரத்தை நாடி, அதன் பழத்தை நினைப்பவர்க்கு
அது காஞ்சிரங்காயையே ஈந்ததானால், அது முற்பிறவியில் செய்த
வினை என்கிறார். காஞ்சிரங்காய் என்பது கசப்பும் விஷத்தன்மையும்
கொண்டதொரு காய்.
இந்தப் பிறவி என்பது முற்பிறவிகளில் சேர்த்துவைத்த வினைகளின்
கூட்டு விளைவு என்றாகிறது.
கேட்பவர் ஒளவையார்.
ஆமோதிப்பவர் திருவள்ளுவர்.
‘”ஆகூழால் தோன்றும் அசைவின்மை, கைப்பொருள்
போகூழால் தோன்று மடி”
இந்த “ஆகூழ்”, “போகூழ்” என்று வள்ளுவர் குறிப்பிடுவதெல்லாம்
சென்ற பிறவிகளில் செய்த நல்வினை தீவினைகளின் விளைவாக
ஏற்பட்ட விதிப்பயனைத்தான்.
“வகுத்தான் வகுத்தவகையல்லாற் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தலாிது.”
இவ்வாறெல்லாம் விாிவாக “ஊழ்” என்னும் அதிகாரத்தில் கூறிவிட்டுப்
பெருமூச்சுடன் இறுதியில் நம்மிடமே கேட்கிறார் வள்ளுவர்.
“ஊழிற் பெரு வலி யாவுள?”
முற்பிறவியில் செய்த நல்வினைகள் தீவினைகளால் மட்டுமே
இப்பிறப்பில் எல்லாமே அமையும் என்றால்
“அது வேண்டும், இது வேண்டும்” என்று ஏன் தெய்வத்தைக் கேட்க
வேண்டும்? யாகம் ஏன்? பூசை ஏன்? ஹோமம் ஏன்? கேட்டாலும்
கிடைக்காது எனின் கேட்பதால் ஆவதுதான் என்ன, முயற்சி எவ்வளவு
செய்தாலும் ஆகமாட்டாது என்றிருந்தக்கால்?
‘ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவின்றித்
தாழாது உஞற்றுபவர்”
நல்ல முயற்சியுடையோர் ஊழையும்கூடப் புறமுதுகிடச் செய்து
விடுவார்கள் என்றும்,
“தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருந்தக் கூலி தரும்”,
என்றும் வள்ளுவர் கூறியிருப்பது?
வினைகளையும், பிறவிகளையும், விதியையும் மாற்றிக்கொள்ள
முடியுமா?
>
அன்புடன்
ஜெயபாரதி
===========================
Date: Thu, 21 Mar 2002 12:56:07 +0800
Subject: Re: Answer#2-Re: [agathiyar] vidhiyai velluthal
To: agathiyar@yahoogroups.com
From: jaybee
Continuation to what JayBee wrote aAt 12:14 PM 3/21/02 +0800:
>
வினைகளையும், பிறவிகளையும், விதியையும் மாற்றிக்கொள்ள முடியுமா?
The Grand Designer, the Master Planner, the CEO of the the universe
in its entirity is brought into the play.
மீண்டும் சாஸ்திரங்களுக்கே செல்கிறேன்.
விதியை மாற்ற வல்லவன் இறைவன். விதியின் எந்த அம்சங்களை
யெல்லாம் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறானோ, அவற்றை
யெல்லாம் மாற்ற வல்லவன் இறைவன்.
“விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில் அவை ஒன்றுமில்லையே!
பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணி நின்றறுப்பது நம சிவாயவே!”
அப்பர் வாக்கு. விண்ணளவுக்கு அடுக்கிவைத்த விறகுக் குவியல்.
அதனை எரித்துப் புகையாக்கும் நெருப்பு; சிந்தித்துப் பார்த்துச்
சொல்லும்போது அது ஒன்றுமே இல்லை.
நாதனின் நாமம் தீவினைகளை அழித்துவிடும்.
இறைவனாலும் மாற்றியமைக்க முடியாதது விதி என்றால்,அது இறைவனின்
இறைத்தன்மையையே கேள்விக்குாியதாகச்செய்யும்.
இறைவனாலும்கூட விதியை மாற்ற முடியாது என்றால், நமது சமயத்தின்
அஸ்திவாரமே ஆட்டங்கண்டுவிடும். பிரார்த்தனைகளுக்கு அங்கு
இடமே கிடையாது.
வழிபாட்டில் ‘காம்ய வழிபாடு’, ‘நிஷ்காம்ய வழிபாடு’ என்று இரு வகையுண்டு.
எதையேனும் வேண்டி ,பெறுதலுக்காகச் செய்யப்படுவதே ‘காம்யம்’.
இறைவன்பால் அன்பால் இறைவனுக்கே அர்ப்பணமாகச் செய்யப்படுவது,
செய்யப்படுவது ‘நிஷ்காம்யம்’.
‘கலையாத கல்வியும், குறையாத வயதும், கபடுவராத நட்பும்’,
என்ற பாடலில் அன்னை அபிராமியிடம்நீண்ட பட்டியலிட்டு பதினாறு
பேறுகளையும் நிறையவே கேட்கிறார், அபிராமி பட்டர்.
——————
இப்பாடலின் முடிவில் அபிராமி தோன்றி,
“மகனே, சுப்பிரமணிய பட்டா! எல்லாமேவிதிப்படிதான் நடக்கும். உனக்கு
இதையெல்லாம் அடைய உனக்கு விதியில்லை. ஆகவே நீ கேட்பது
எதையுமே என்னால் தர இயலாது” , என்று கூறினால், எப்படியிருக்கும்?
முற்பிறப்பில் செய்த வினைப்பயனால் இப்பிறப்பில் எதுவுமே நடக்கும்
என்பது ஒரு பொது விதி.
விதி என்றிருந்தக்கால், விதி விலக்கும் இருக்கும் அல்லவா?
விதியிலிருந்து விலகி நின்று விதிக்கெல்லாம் விலக்கு வழங்க வல்லான்
இறைவன்.
கந்தர் அனுபூதியின் கடைசிப்பாடலில்,
“கருவாய் உயிராய், கதியாய் விதியாய்,
குருவாய் வருவாய்; அருள்வாய் குகனே! ”
கதி என்பது மாற்றப்பட முடியாத General Plan.
விதி என்பது அதற்குள் உள்ள மாற்றக்கூடிய அம்சம்.
விதியை, மதியால் modify பண்ண முடியும். விதியை மாற்றுமாறு இறைவனை
இறைஞ்சுவதும் கூட மதியினால் ஆவதுதான்.
ஒரு space vehicle-லின் design, construction, launching, flight programme,
முதலிய பல விஷயங்களை NASA நிர்ணயிக்கிறது. இதில் Houston
சர்வ வல்லமை படைத்தாக இருக்கிறது. அந்த space vehicle-லின் உள்ளே
பயணிக்கும் astronauts அதற்கெல்லாம் கட்டுப்பட்டே இருக்க வேண்டியுள்ளது.
ஆனாலும்கூட அந்த space vehicle-லின் உள்ளே செய்யக்கூடிய பல
காாியங்களில் அவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. அவர்கள் இஷ்டப்படி
முன்பின்னாகவோ அல்லது அவர்களின் சக்திக்கு உட்பட்ட விதத்திலோ
அவர்களின் activities-ஐ modify செய்து கொள்ளமுடியும்.
ஏன்? ஏதாது ஏடாகூடம’கச் செய்து அந்த mission-ஐயே abort செய்ய
வைக்கமுடியும். அல்லது self-destructive-ஆக ஏதாவது செய்து
கொள்ளலாம்……
ஆயுள் முடியுமுன் தற்கொலை செய்து கொள்வது போல.
Houston கையில் கதியும் விதியும் இருக்கிறது.
Astronauts கையில் விதியை modify செய்துகொள்ளும் சக்தி
இருக்கிறது.
மனித ஜாதகத்தில், பிறக்கும்போது இருந்த லக்னமும் கிரகங்களின்
நிலைகளும் ‘கதி’யைக் குறிக்கும். தசாபுக்திகள் எனப்படுபவை,
‘விதி’யைக் குறிக்கும். சந்திரனை அடிப்படையாகக் கொண்டுள்ள
‘கோசாரம்’ மதியைக் குறிக்கும்.
ஒரு சிறிய கதை……
எழு நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. மைசூர்ப்பகுதியில் ஓர் ஏழை.
செல்வம் வேண்டி நீண்டகாலம் திருமகளைஉபாசித்துவந்தான்.
லட்சுமியும் தோன்றினாள்.
” உனக்கு செல்வம் இந்த ஜென்மத்தில் கொடுத்துவைக்கவில்லை.”என்று
கூறினாள். அந்த ஏழை, உடனடியாக ‘ஆபத் சன்னியாச’ முறையில்
தன்னையே சன்னியாசியாக்கிக் கொண்டுவிட்டான்.
“அம்மா! ‘சன்னியாசம்’ என்பது மறுபிறவி போன்றதே! ஆகவே இப்போது
எனக்கு செல்வம் வழங்க அட்டி ஒன்றும் இல்லையே?” என்று லட்சுமியைக்
கேட்டான்.
லட்சுமியும் பொன்மழையைக் கொட்டச்செய்தாள்.
அதை அள்ளப் போனவனிடம் கேட்டாள்,
“சன்னியாசிக்கு ஏனப்பா, இவ்வளவு செல்வம்?”
(அந்த மகான் வித்யாரண்யர் அந்த செல்வத்தையெல்லாம் என்ன செய்தார்
என்பது வேறொரு கதை. அதனை ‘நவராத்திரி நாயகி’ மடல் தொடரில்
சொல்லியிருக்கிறேன். அதில் பார்த்துக்கொள்ளுங்கள்)
மணி, மந்திர, ஒளஷதங்கள் முதலிய முறைகளினால் விதியை ஓரளவிற்கு
மாற்றியமைக்கலாம்.
இவை அனைத்துமே மனித முயற்சிகள்.
ஒரு வரையறைக்குள் திருவினைக்கும்.
(மணி = ஜோதிடம், gemmology, நியூமராலஜி, etc.;
மந்திரம் = யாகம், பாிகாரம், வழிபாடு,etc.;
ஒளஷதம் = மருந்து, மூலிகை ,மருத்துவ முறைகள்)
அடுத்து…..
Heisenberg, etc,…..
அன்புடன்
ஜெயபாரதி