இந்து பயங்கரவாதிகளின் வீடுகளில் வண்டி வண்டியா

முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு, நாட்டில் நடக்கும் ஒவ்வொரு தீவிரவாதச் செயலுக்கும் முஸ்லிம்களே காரணம் என்று ஜோடிக்கப்பட்டு வரும் சூழலில்,

தானே நகர தியேட்டர் ஒன்றில் வெடித்த வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன் படுத்தப் பட்ட வெடிமருந்துகள், மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் இந்துத் தீவிரவாதிகளின் வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

புதிய மும்பையின் வாஷி பகுதியில் உள்ள விஷ்ணு தாஸ் பாவே அரங்கத்திலும் தாணே பகுதியில் உள்ள கட்காரி ரங்கயாதன் அரங்கத்திலும் மிகப்பெரிய உயிர்சேதத்தை விளைவிக்கும் சதித் திட்டத்தில் ஈடுபட்ட நால்வரை மஹாராஷ்டிரக் காவல் துறைக் கைது செய்துள்ளது.

அவர்கள் பெயர்கள் பின்வருமாறு:
1. மங்கேஷ் தின்கர் நிகம்
2. ரமேஷ் ஹனுமன்த் கட்கரி
3. சந்தோஷ் ஆங்ரே மற்றும்
4. விக்ரம் பாவே

கைது செய்யப்பட்ட இந்த நால்வரும் Janjagruti Samiti மற்றும் Sanatan Sanstha ஆகிய ஹிந்துத்துவாக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ராய்காட் மாவட்டத்திலுள்ள வார்சாய் கிராமத்தில் உள்ள விக்ரம் பாவே மற்றும் மங்கேஷ் தின்கர் நிகம் ஆகியோரின் வீட்டிலும் விளைநிலத்திலும் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

அதில் துப்பாக்கிகளும், 92 குண்டுகளும், 20 டெட்டோனேட்டர் குண்டுகளும், 19 ஜெலட்டின் குச்சிகளும், பெரும் அழிவை ஏற்படுத்தவல்ல மிக அதிக அளவிலான அமோனியம் நைட்ரேட் தூளும் கைப்பற்றப்பட்டன.

இது தவிர டைம் பாம் மற்றும் ரிமோட் கண்ரோலில் வெடிக்கச் செய்யும் வெடிகுண்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் டைமர்களும் வோல்ட்டேஜ் மீட்டர்களும் ரேடியோ சர்க்கியூட் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் போன்றவையும் கண்டெடுக்கப்பட்டன.

பயங்கரவாதத் தடுப்புப் படையினரின் இந்தத் திடீர் சோதனையைப் பற்றி எப்படியோ மோப்பம் பிடித்துக் கொண்டு வெடிமருந்துகளை அவசரமாக வெடிக்க முயன்ற ஹரி பாவ் தேவ்கர் என்பவனையும் காவல்துறை கைது செய்தது.

இதில் மங்கேஷ் என்பவன், கடுமையான விசாரணைக்குப் பிறகே பெரும் அளவிலான வெடிமருந்துகளை சட்டாரா மாநிலத்தில் மறைத்து வைத்துள்ளதை ஒப்புக் கொண்டதாகக் காவல் துறை அறிவித்துள்ளது. இந்தத் தகவல் கிடைத்தவுடன் விரைந்த காவல் துறை, அவன் கொடுத்தத் தகவல்படி, வெடிகுண்டுகள் செய்யப் பயன் படுத்தும் பொருட்களைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் நடக்கவிருந்த இன்னொரு மிகப் பெரும் சமூக அழிவு தடுக்கப்பட்டுள்ளது.

தானே நகரத்தின் கட்காரி ரங்கயாதன் அரங்கத்தில் இவர்கள் நிகழ்த்திய கொடூர வெடிகுண்டு சம்பவத்தின் மூலம் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். அதில் இவர்கள் டெட்டோனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைம் பாம் ஆகியவற்றைப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

புதிய மும்பையிலுள்ள விஷ்ணு தாஸ் பாவே தியேட்டரில் இவர்கள் நிகழ்த்த இருந்த மிகப் பெரும் உயிர்ச்சேதம் இறுதி நேரத்தில் கிடைத்த தகவல்கள் மூலமாக குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே தமிழகத்தில் தென்காசியில் ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் முஸ்லீம்களின் மீது பழியைப்போட்டு மீண்டும் ஒரு கலவரத்திற்கு வித்திடலாம் என்ற நோக்கத்துடம் அந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களே குண்டு வைத்துவிட்டு நேர்மையான காவல் துறை அதிகாரிகளின் துரிதமான நடவடிக்கையால் கைது செய்யப்பட்டார்கள்.

சாதாரனமாக எங்காவது குண்டு வெடித்துவிட்டால் அலரியடித்துகொண்டு முஸ்லீம்களின் மீது பழிபோடும் பத்திரிக்கைகள் சமீபகாலமாக இது போண்ற பயங்கரவாத செயல்களுக்காக ஹிந்துத்வா பயங்கரவாதிகள் தொடர்ந்து கைது செய்யப்படும் போது மட்டும் வாய்மூடி மௌனமாக இருப்பது தான் ஏன் என்று புரியவில்லை.

எனவே, இது போன்ற உன்மைகளை வெளிக்கொனரும் விதமாக நாம் அனைவரும் பத்திரிக்கை மற்றும் மீடியாக்களில் கவனம் செலுத்த முன்வர வேண்டும். நாம் அநியாயத்திற்கு ஆதரவாக அல்ல உன்மைகளுக்கு ஆதரவாக எழுதுவோம். முஸ்லீம் தவறிழைத்திருந்தாலும் முஸ்லீம் அல்லாதவன் தவறிழைத்திருந்தாலும் எது சத்தியமோ அதை எடுத்துரைப்போம்.

எழுதுகோல் ஆயுதமேந்துவோம். நம் அறிவாயுதத்தை பயன் படுத்துவோம்

பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுவோம்:

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 5:8

முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்¢ எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள். மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். - அல்குர்ஆன் 4:135

www.eastadirai.blogspot.com
www.fayasad.page.tl

English to Tamil converter

Transliterate to Tamil - தமிழில் தட்டச்சு செய்ய

Type your text here See your results here
The vowels:
a aa, A i ee, I u oo, U
e ae, E ai o oa, O au
Ahh, H
The Consonants:
g, k, kh, c க் nG ங் ch ச் j ஜ் nY ஞ்
d, t ட் nN ண் dh, th த் N ந் n ன்
b, bh ப் m ம் y ய் r ர் R ற்
l ல் L ள் zh ழ் v, w வ்
sh ஷ் s ஸ் h ஹ் f ஃப்

Letters like g and k represent the same thamizh letter. So, "akhilaa", "akilaa", "agilaa", "acilaa" all give "அகிலா"

To get the complete syllable, suffix it with an "a". For eg., "pa" is "ப".

For half syllables, stop with the code for that syllable alone. For eg., "zh" is "ழ்". The general rule of thumb is that with two touching syllables, the former syllable is a half syllable. So, "chcha" is "ச்ச". The syllable "ங்" has to be typed out as "ng" and it is usually followed by a "k". As in, "thangkai" "தங்கை".

Some examples

vijay விஜய்
vidhyaa வித்யா
lathaa லதா
latchumiNaaraayanNan லட்சுமிநாராயணன்
akhilaa அகிலா
pirathaap பிரதாப்
bharath பரத்
kirushnNaswAmi கிருஷ்ணஸ்வாமி

Contact: liyer.vijay@gmail.com

The code this site uses is here. It is free for use.